Home நாடு மீண்டும் ஊராட்சிமன்றத் தேர்தலை நிலைநிறுத்த நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்!

மீண்டும் ஊராட்சிமன்றத் தேர்தலை நிலைநிறுத்த நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்!

598
0
SHARE
Ad

புத்ராஜெயா: ஊராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் நிலைநிறுத்தக் கோரி வீடுவசதி மற்றும் ஊராட்சிமன்ற அமைச்சு தனது அமைச்சரவை ஆவணங்களை முன்வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்குள் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அமைச்சு தற்போது அமைச்சரவை ஆவணங்களை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக தயார் செய்து வருவதாக வீடுவசதி மற்றும் ஊராட்சிமன்ற அமைச்சின் துணை அமைச்சர் ராஜா காமாருல் பாஹ்ரின் ஷா தெரிவித்தார்.