Home One Line P1 ஐரிஷ் சிறுமி: தவறான தகவல்களை பரப்பாதீர்கள்!- காவல் துறை

ஐரிஷ் சிறுமி: தவறான தகவல்களை பரப்பாதீர்கள்!- காவல் துறை

561
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை டி டுசுன் ரிசோர்ட்டிலிருந்து கற்றல் குறைபாடுகள் உள்ள ஐரிஷ் நாட்டினைச் சேர்ந்த 15 வயது சிறுமி நோரா அன் குய்ரின் காணாமல் போன விவகாரத்தில் கடத்தல் நடவடிக்கை சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை காவல் துறையினர் மறுத்துள்ளனர். இச்சம்பவம் வெளிநாட்டு ஊடக செய்திகளிலும் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எந்த குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த விவகாரம் இன்னும் “காணவில்லை” என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நெகிரி செம்பிலான் காவல் துறைத் தலைவர் முகமட் மாட் யூசோப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் இன்னும் அருகிலேயே இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் எங்கள் மீட்புப்படைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எந்தவொரு தகவலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்றும், தேவையற்ற கதைகளை இந்த விவகாரத்தில் சேர்க்கக்கூடாது என்றும் முகமட் கேட்டுக் கொண்டார்.

தவறான தகவல்களை பரப்பியதற்காக நாங்கள் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், சரியான தகவலை வழங்குவதில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு இருந்தால் இந்த விவகாரத்தை விரைவில் தீர்க்க முடியும்என்று அவர் கூறினார்.