முத்து நெடுமாறன், “மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்த சிறப்புரை அங்கத்தில் அவரோடு இணைந்து ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம் உதவியாகச் செயலாற்றினார்.
அவர் பேசுகையில் இடைநிலைப் பள்ளித் தமிழாசிரியர்களின் பங்கு மகத்தானது என்று பாராட்டினார். தன்னால் முடிந்த உதவிகளைக் கழகத்திற்கு வழங்குவேன் என்று கூறினார்.
பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ஜோகூர் மாநில தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் தலைவரான அரா.பாஸ்கரன் “அனைத்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் கழகச் செயலவையினர்களுக்கே சாரும்” என்று கூறினார்.


அதே வேளையில் கழக உறுப்பினர்கள், செயலவை உறுப்பினர்கள், சிறப்பு சொற்பொழிவாளர் முத்து நெடுமாறன், திருமதி கஸ்தூரி இராமலிங்கம், எஸ்.எ.அருண் ஆகியோருக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற ஆதரவு அளித்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றிக் கூறுவதாகவும் அரா.பாஸ்கரன் தெரிவித்தார்.