Home One Line P1 தஞ்சோங் பியாய்: மலாய் வேட்பாளரே போட்டியிட வேண்டும், மக்கள் விருப்பம்!- அனுவார் மூசா

தஞ்சோங் பியாய்: மலாய் வேட்பாளரே போட்டியிட வேண்டும், மக்கள் விருப்பம்!- அனுவார் மூசா

679
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் பெரும்பான்மையானோர் அத்தொகுதியில் மலாய் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று விரும்புவதாக அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.

தஞ்சோங் பியாய் வாக்காளர்களின் மனநிலையைப் பார்க்க கட்சியின் அடிமட்ட முயற்சியின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக அனுவார் கூறினார்.

எவ்வாறாயினும், மசீசவின் பாரம்பரிய இருக்கையான அங்கு, எந்த வேட்பாளர் களம் இறங்க வேண்டும் என்பதனை தேசிய முன்னணி தலைவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மசீசவுடன் ஆலோசித்த பிறகு, தேசிய முன்னணி மலாய் வேட்பாளர்கள் நிறுத்த தைரியத்துடன் செயல்பட வேண்டும். நாம் வெற்றி ஒரு வாய்ப்பு உள்ளது. ஒரு சீன வேட்பாளர் மலாய் வேட்பாளரை எதிர்த்து நிற்க வைத்தால் நாம் தோல்வியடைவோம்” என்று அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி, தஞ்சாங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நவம்பர் 16-ஆம் தேதியும், நவம்பர் 12-ஆம் தேதி முதற்கட்ட வாக்கெடுப்பும் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.