Home நாடு சுங்கைப் பட்டாணியில் சயாம்-பர்மா மரண இரயில் பாதை கருத்தரங்கம்

சுங்கைப் பட்டாணியில் சயாம்-பர்மா மரண இரயில் பாதை கருத்தரங்கம்

861
0
SHARE
Ad

சுங்கைப்பட்டாணி – இரண்டாம் உலகப் போரின் போது இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிக் கட்டப்பட்ட சயாம்-பர்மா மரண இரயில் பாதை குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் மரண இரயில்வே நலன் குழுவினர், எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி தாய்லாந்துக்கு இதன் தொடர்பில் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப் பயணம் தொடர்பில் சுங்கைப்பட்டாணியில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 10-ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை இந்தக் கருத்தரங்கம் ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப் பள்ளி, ஜாலான் கிளப் சிந்தா சாயாங், சுங்கைப்பட்டாணி என்ற இடத்தில் நடைபெறுகிறது.

சயாம்-பர்மா மரண இரயில் பாதை நிர்மாணிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பது, எதிர்வரும் நவம்பர் 29 தொடங்கும் சயாம் மரண இரயில்வே தொடர்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் சுற்றுலா குறித்த விளக்கம், ஆகிய நோக்கங்களுக்காக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

மேலும் விவரங்கள் பெற விரும்புவோர்  கீழ்க்காண்பவர்களைத் தொடர்பு கொள்ளலாம்:

Vivek 0195410400
Narayanasamy 013 4228477
Chandrasekaran 0178887221