Home One Line P2 டிசம்பர் 27, 30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள்

டிசம்பர் 27, 30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள்

815
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் 9 புதிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என தமிழகத் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணை வெளியிட்டிருக்கிறது. அதன்படி நாளை திங்கட்கிழமை டிசம்பர் 9 காலை 10.00 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவில்லை எனக்கூறி திமுக மீண்டும் நீதிமன்றம் செல்லப் போவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூ​ர், திருப்பத்தூ​ர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 புதிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும்.

#TamilSchoolmychoice

திமுகவின் புதிய வழக்கால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுமா என்ற கேள்விக் குறியும் எழுந்திருக்கிறது.