Home One Line P2 அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது

557
0
SHARE
Ad

கோயம்புத்தூர் – அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி தமிழகக் காவல் துறையினரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவர் அதிமுகவில் இல்லையென்றாலும், தொடர்ந்து நான் அதிமுககாரன்தான் என்று கூறிக் கொண்டு தமிழகத் தொலைக் காட்சிகளில் நடத்தப்படும் அரசியல் விவாதங்களில் அடிக்கடி பங்கேற்று வந்தவர் அவர்.

நாமக்கல்லின் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 1989ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழனிசாமி. காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். பின்னர் அவர் அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

கோவையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று அதிகாலை சென்ற காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் அவரைக் கைது செய்தனர். சூலூர் காவல் நிலையத்திற்கு அவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அ.தி.மு.க. பெயரில் போலி இணையதளம் நடத்தியுள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.