Home One Line P1 மில்லியன் கணக்கான ஊழல் வழக்கு விசாரணையின் முதல் நாளில் ரோஸ்மா கலந்து கொள்ளவில்லை!

மில்லியன் கணக்கான ஊழல் வழக்கு விசாரணையின் முதல் நாளில் ரோஸ்மா கலந்து கொள்ளவில்லை!

505
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  தம்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு விசாரனையின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை, ரோஸ்மா மன்சோர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

முன்னாள் பிரதமரின் மனைவியான அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ஜக்ஜித் சிங் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். பிப்ரவரி 2-ஆம் தேதியிட்ட சுகாதார அறிக்கையின் நகலை நீதிபதியின் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம்என்று அவர் நீதிபதி முகமட் சைனி மஸ்லானிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சரவாக் மாநில கிராமப்புறங்களில் உள்ள 369 பள்ளிகளில் சூரிய மின்சாரம் வழங்கவும், நிறுவவும் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் கோரியதாக ரோஸ்மா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.