Home One Line P2 டோனி பெர்னாண்டஸ், கமாருடின் மெரானுன் ஏர் ஆசியா உயர் பதவியிலிருந்து 2 மாதத்திற்கு விலகல்!

டோனி பெர்னாண்டஸ், கமாருடின் மெரானுன் ஏர் ஆசியா உயர் பதவியிலிருந்து 2 மாதத்திற்கு விலகல்!

725
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், ஏர்பஸ் உடனான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ உடனடியாக இரண்டு மாதத்திற்கு நிர்வாக அதிகாரி பதவியை விட்டு விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் ஆசியா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ கமாருடின் மெரானூனும் உடனடியாக அப்பதவியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

ஏர் ஆசியாவின் இயக்குநர்கள் குழு நிர்வாக சபை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிர்வாக சபை குழுவை அமைத்துள்ளதை அடுத்து, இந்த பதவி விலகல் செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இருப்பினும், டோனி மற்றும் கமாருடின் ஆகியோர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆலோசகர்களாக செயல்படுவார்கள்.

இருப்பினும், அவர்கள் இருவரும் இந்த காலம் முழுவதும் ஏர் ஆசியாவின் ஆலோசகர்களாக இருப்பார்கள்.

பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் ஏர் ஆசியா குரூப் பெர்ஹாட்டின் செயல்முறை தலைமை நிர்வாக அதிகாரியாக தருமலிங்கம்  அல்லது போ லிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் ஆசியா நேற்று திங்களன்று புர்சா மலேசியாவுக்கு வழங்கிய அறிவிப்பு கடிதத்தில் இது உறுதிப்படுத்தப்பட்டது.