Home One Line P1 குர்ஆனை அவமதித்த நபரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

குர்ஆனை அவமதித்த நபரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

551
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: அண்மையில் குர்ஆனை மிதித்ததற்காக கைது செய்யப்பட்ட நபரை மனநல பரிசோதனைக்காக இங்குள்ள பெர்மாய் மருத்துவமனைக்கு அனுப்புமாறு கீழ்நிலை நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

துணை அரசு வழக்கறிஞர் நூர்ஹயாதி முகமட் பதுல்லா நீதிபதி நூர்சிதா அப்துல் ரஹ்மானிடம் விண்ணப்பித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

33 வயதான முகமட் சுல்கிப்ளி அலிக்கு எதிரான உத்தரவு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 342-இன் கீழ் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

இது முகமட் சுல்கிப்ளியின் மன ஆரோக்கியத்தின் உண்மையான நிலையை தீர்மானிக்க, அரசு மற்றும் நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் அமையும்.

இஸ்லாத்தை அவமதிக்கும் நோக்கில் குர்ஆனை மிதித்ததன் மூலம் முகமட் சுல்கிப்ளி அவதூறு செய்ததாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது மத உணர்வுகளுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் வேறொரு நபரிடம் அவமானகரமான வார்த்தைகளை உச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு குற்றச்சாட்டுகளிலும், முகமட் சுல்கிப்ளி மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295-இன் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

அதே சட்டத்தின் பிரிவு 298-இன் கீழ், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.