Home One Line P1 விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: விசாரணை நிறுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை!- காவல் துறை

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: விசாரணை நிறுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை!- காவல் துறை

975
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணையை உடனடியாக நிறுத்த உத்தரவிட்ட அரசாங்க தலைமை வழக்கறிஞரின் அலுவலகத்திலிருந்து காவல் துறைக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

“அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து இந்த விவகாரம் குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை” என்று அவர் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறிய வழக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டோமி தோமஸ் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான 34 குற்றச்சாட்டுகளில் எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் தண்டனை வழங்குவதற்கான தெளிவான ஆதாரம் இல்லை என்று அது கண்டறிந்தது மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பின் 145 (3)-வது பிரிவின்படி இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது கொல்லப்பட்ட வேலுபிள்ளை பிரபாகரன் மற்றும் பிற விடுதலைப் புலிகள் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படம் ஒவ்வொன்றும் தங்களது கைபேசி அல்லது முகநூல் கணக்கில் அவர்கள் வைத்திருப்பதாக 11 பக்க ஊடக அறிக்கையில் தோமஸ் இதனை விளக்கினார்.

“அத்தகைய செயல் ஒரு குற்றவியல் செயலாகக் கருதப்படுமானால், அது சட்டத்தை அவமரியாதைக்குரியதாகும்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

“எனவே, மத்திய அரசியலமைப்பின் 145 (3)-வது பிரிவின் கீழ் எனது விருப்பப்படி செயல்படுவதில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.