Home One Line P1 பத்திரிகையாளர்களுக்கு உணவு வழங்கிய மாமன்னர்!

பத்திரிகையாளர்களுக்கு உணவு வழங்கிய மாமன்னர்!

508
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் நடக்கும் அரசியல் குழப்பம் தொடர்பாக மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் அக்கறைக்கொண்டுள்ளோம். பொறுமையாக இருங்கள். முதல் முறையாக நிகழ்கிறது. நான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக் கூட்டத்தை முடித்து விடுகிறேன்.”

“நாட்டிற்காக சிறந்த ஒரு முடிவை நாம் கண்டறியலாம் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று மாமன்னர் கூறினார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, நேற்று திங்கட்கிழமை தொடங்கி இஸ்தானா நெகாராவின் முன் செய்திகளை சேகரிக்க குவிந்துள்ள பத்திரிகையாளர்களுக்கு மதிய உணவாக மாமன்னர் ‘மெக்டோனல்ட்ஸ்’ வழங்கினார். முன்னதாக நேற்று இதே போன்று அவர்களுக்கு ‘கெஎப்சி’ உணவை வாங்கித் தந்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.