Home One Line P1 மாமன்னர்: தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் நேர்காணல் செய்யப்படுகின்றனர்!

மாமன்னர்: தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் நேர்காணல் செய்யப்படுகின்றனர்!

720
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 20 தேசிய முன்னணி மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் ஏறி இஸ்தானா நெகாராவை வந்தடைந்தனர். மேலும், பலர் அரண்மனையை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பேருந்தில் வந்தவர்களில் பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹாசன் மற்றும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அசிஸ் அப்துல் ராகிமும் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது.

#TamilSchoolmychoice

வட்டாரங்களின் அறிக்கைபடி மாமன்னர் இன்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நாளை நம்பிக்கைக் கூட்டணி நாடளுமன்ற உறுப்பினர்களியும் நேர்காணல் செய்வார் என்று கூறப்படுகிறது.