Home One Line P1 பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேறினார்!

பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேறினார்!

649
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

ஜோகூர் பாரு: ஜோகூரில் ஆட்சி அமைக்க பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு இறுதியாக போதுமான பெரும்பான்மை சட்டமன்றத்தில் கிடைத்துள்ளது.

பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் சோங் பேட் புள் (மேல்) அக்கட்சியை விட்டு வெளியேறியதை அடுத்து இது நடந்துள்ளது.

முதல்வர் ஹாஸ்னி முகமட் மற்றும் முவாபாக்காட் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர் சந்திப்பில் சோங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

“நான் எனது ஆதரவாளர்கள், எனது வாக்காளர்கள், எனது குடும்பத்தினர், எனது நண்பர்கள் ஆகியோருடன் ஆலோசித்தேன்.”

“என்னைப் பொறுத்தவரை முதிர்ச்சியான முடிவுதான்.” என்று அவர் கூறினார்.