Home One Line P1 ஜோகூர் மாநில ஆட்சிக்குழு வெள்ளிக்கிழமை பதவியேற்கிறது – மஇகாவின் சார்பில் வித்தியானந்தன் இடம் பெறலாம்

ஜோகூர் மாநில ஆட்சிக்குழு வெள்ளிக்கிழமை பதவியேற்கிறது – மஇகாவின் சார்பில் வித்தியானந்தன் இடம் பெறலாம்

640
0
SHARE
Ad
ஜோகூர் சுல்தானுடன் புதிய மந்திரி பெசார் – பதவியேற்பு சடங்கின்போது….

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தின் முந்தைய அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அம்னோ தலைமையில் அமையும் புதிய அரசாங்கம் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஜோகூர் சுல்தான் இப்ராகிம் முன்னிலையில் பதவியேற்கிறது.

ஜோகூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக டத்தோ ஹஸ்னி முகமட் ஏற்கனவே பதவி நியமனம் பெற்றிருக்கிறார்.

ஜோகூர் மாநிலத்தின் 10 பேர்கள் கொண்ட ஆட்சிக் குழுவில் இடம் பெறப் போகிறவர்கள் யார் என்பது இதுவரையில் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் பாஸ் கட்சியின் பிரதிநிதி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

மஇகாவின் சார்பில் கஹாங் சட்டமன்ற உறுப்பினர் வித்தியானந்தன் ஆட்சிக் குழு உறுப்பினராக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வியாழக்கிழமை புதிய ஆட்சிக் குழு உறுப்பினர் பட்டியல் தொடர்பில் சுல்தான் இப்ராகிமையும், ஜோகூர் மாநில இளவரசர் சுல்தான் இஸ்மாயிலையும் ஹஸ்னி முகமட் சந்தித்தார