Home One Line P1 செலாயாங் பாரு, கோம்பாக்கில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது!

செலாயாங் பாரு, கோம்பாக்கில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது!

384
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கழமை முதல் மே 3 வரை செலாயாங் பாரு மற்றும் கோம்பாக் ஆகிய பகுதிகள் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கொண்டுவரப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

இதன் மூலமாக நாட்டில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

முன்னதாக, கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் இந்த உத்தரவுக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.