Home One Line P2 சுந்தர் பிச்சைக்கு 281 மில்லியன் டாலர்கள் கூடுதல் சம்பள சலுகைகள்

சுந்தர் பிச்சைக்கு 281 மில்லியன் டாலர்கள் கூடுதல் சம்பள சலுகைகள்

593
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான அல்பாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உலகிலேயே அதிக சம்பளம் அதிகாரிகளில் ஒருவராவார்.

கடந்த 2019 ஓராண்டுக்கு மட்டும் சுந்தர் பிச்சைக்கு அல்பாபெட் 281 மில்லியன் டாலர் சம்பள சலுகைகளை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் பெரும்பான்மையான தொகை பங்குகள் வடிவில் வழங்கப்படும்.

கொவிட்-19 பாதிப்புகளுக்கு மத்தியில் அல்பாபெட் நிறுவனத்தை இலாபகரமாகச் செலுத்தும் பெரும் பொறுப்பை சுந்தர் கொண்டிருப்பதால் அவருக்கு இவ்வளவு பெரிய சம்பளம் வழங்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

2019-இல் அவருடைய ஆண்டு சம்பளம் 650,000 டாலர்களாக இருந்தது. இந்த ஆண்டில் அவரது சம்பளம் ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர்களாக உயரும்.

அல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட 1,085 மடங்கு அதிக சம்பளத்தை 47 வயதான சுந்தர் பெறுகிறார்.