Home One Line P1 பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும்!- இஸ்மாயில் சப்ரி

பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும்!- இஸ்மாயில் சப்ரி

468
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், பள்ளி  திறப்பு குறித்த எந்தவொரு வழிகாட்டல்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவுகள் கல்வி அமைச்சிடமிருந்து கிடைக்கவில்லை என்றும் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

முன்னதாக, பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்ய அனுமதிக்க பள்ளி திறப்பு மேலாண்மை வழிகாட்டுதல்கள் நாளை வியாழக்கிழமை விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்திருந்தார்.

மாணவர்கள் பள்ளிக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீடு திரும்பும் வரை பள்ளியில் மாணவர்கள் நடமாட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றுடன் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“பள்ளி திறப்பு மற்றும் பாடசாலையின் சரியான தயார் நிலை ஆகியவற்றின் பின்னணியில் என்ன வழிமுறைகள் செய்யப்பட வேண்டும் என்பதை அறிய இந்த வழிகாட்டுதல்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். பள்ளி திறக்கப்படலாம் என அறிவிக்கும் போது ஒவ்வொரு பள்ளியும் தயாராக இருப்பதை உறுதிசெய்கிறோம்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.