Home One Line P1 சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிகேஆர் போட்டியிடவில்லை

சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிகேஆர் போட்டியிடவில்லை

500
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சினி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி நிறுத்தாது என்று பிகேஆர் அறிவித்துள்ளது.

கொவிட்-19- இன் பிரச்சனையை நாட்டில் முழுமையாக தீர்க்காதபடியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

“அதே நேரத்தில், புதிய விதிமுறைகளின் பின்னணியில், தேர்தல்களுக்கு முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் வாக்காளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்கள் இன்னும் கவலைக்குரியவை.

#TamilSchoolmychoice

“அறிவிக்கப்படவிருக்கும் நடைமுறைகள் பிகேஆரின் பிரச்சாரம் மற்றும் பணியைத் தொடர்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

“எடுத்துக்காட்டாக, பிரச்சாரத்தில் பேசுவதற்கு 20- க்கும் மேற்பட்டவர்கள் மீதான தடையை ஆராய வேண்டும், மேலும் வீடு வீடாக பிரச்சாரம், கூடாரங்கள் மற்றும் பிற விவகாரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தேர்தல் பணிகளுக்குத் தயாராகும் சூழலில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறை குறித்து இதுவரை எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ” என்று அவர் கூறினார்.

நாடு கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது பகாங்கில் சினி இடைத்தேர்தல் முதன்முதலாக நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம் முன்னதாக ஜூன் 20- ஆம் தேதி நியமனத் தேதியாகவும், முன் கூட்டிய வாக்கெடுப்பு ஜூன் 30-ஆகவும், வாக்களிக்கும் நாள் ஜூலை 4- ஆம் தேதியாகவும் நிர்ணயித்திருந்தது.

வாக்காளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாப்பதில் சினி தேர்தலை செயல்படுத்த ஒரு நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை தயார் செய்வதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹாருண் முன்னர் தெரிவித்திருந்தார்.