Home One Line P1 தேசியச் சின்னம் சீர்குலைப்பு: நிறுவனம் ஒன்றில் காவல் துறையினர் சோதனை

தேசியச் சின்னம் சீர்குலைப்பு: நிறுவனம் ஒன்றில் காவல் துறையினர் சோதனை

465
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசியச் சின்னம் சீர்குலைப்பு தொடர்பாக  பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு நிறுவனத்தை காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர்.

313 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் குற்ற புலனாய்வு பிரிவு இந்த சோதனை நடத்தியதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் புத்தகத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

“முகப்பு அட்டையை வடிவமைத்தது யாரென்று கண்டறிய முயற்சி செய்யப்படுகிறது. நாங்கள் அவரை அடையாளம் கண்டுள்ளோம். ” என்று அவர் கூறினார்.

அவர்களின் தகவல்களின் அடிப்படையில் 1,000 புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்று ஹுசிர் கூறினார்.

அச்சிடும் நிறுவனமும் அடையாளம் காணப்பட்டுள்ளது, என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, தேசியச் சின்னம் சீர்குலைப்பு தொடர்பாக புத்தகத்தின் வெளியீட்டாளர் மன்னிப்பு கேட்டிருந்தார்.

கெராக்புடாயா பதிப்பக நிறுவனத்தின் இயக்குநரும் நிறுவனருமான சோங் டன் சின் இன்று காலை மலேசியாகினியிடம் தேசியச் சின்னத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தார்.

“நாங்கள் உண்மையில் அவமதிப்பதற்கான எண்ணத்தில் இல்லை.

“நாங்கள் தற்செயலாக இருந்திருக்கலாம் என்றாலும், அது யாருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால், புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்கிறேன்.

“எதிர்காலத்தில் நாங்கள் இதில் அதிக கவனம் செலுத்துவோம்.” என்று அவர் கூறினார்.

‘ரிபெர்த்: ரிபோர்மாசி, ரெசிஸ்தன்ஸ் அண்ட் ஹொப் இன் நியூ மலேசியா’ என்ற புத்தகத்தில் , தேசியச் சின்னத்தை அவமதித்ததாகக் கூறப்படும் படங்களைப் பயன்படுத்தியது குறித்து சமீபத்திய நாட்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

மஇகா, மசீச, அம்னோ மற்றும் பாஸ் கட்சியினர் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்திருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு தனது அமைச்சகம் உத்தரவிட்டதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் நேற்று தெரிவித்திருந்தார்.

பாக் சோங் என்றும் அழைக்கப்படும் சோங், புத்தகத்தின் அட்டைப்படத்தில் உள்ள படம் பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியத்திலிருந்து வந்தது என்றும், அட்டைப்படத்தில் அதன் பயன்பாடு ஓவியர் மற்றும் புத்தகத்தின் ஆசிரியர் இடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், புத்தகத்தின் ஆசிரியர் அக்கலைஞரைத் தொடர்பு கொண்டாரா, அல்லது மாறாக, புத்தகத்தின் அட்டைப்படத்திற்கு ஒரு வரைபடத்தைப் பெற்றாரா என்பது அவருக்குத் தெரியவில்லை.

“புத்தகத்தின் அட்டைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியம். சரவாக்கில் ஒரு கண்காட்சியில் அந்த ஓவியம் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.” என்று அவர் தெரிவித்தார்.