Home One Line P2 நா.முத்துகுமாரை கவிதையால் நினைவு கூர்ந்த மகன்

நா.முத்துகுமாரை கவிதையால் நினைவு கூர்ந்த மகன்

540
0
SHARE
Ad

சென்னை – கடந்த 14 ஆகஸ்ட் 2016-ஆம் தேதி அகால மரணமடைந்தவர் தமிழ்த் திரைப்படக் கவிஞர் நா.முத்துகுமார். தனது திரைப்பாடல்களால் குறுகிய காலத்தில் புகழ் பெற்றதோடு, தமிழ்த் திரையுலக இரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் முத்துகுமார்.

மிக இளம் வயதில் மறைந்த அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர்.

கடந்த ஜூலை 12-ஆம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகன் ஆதவன் எழுதியுள்ள உருக்கமான கவிதை முத்துகுமாரை நினைவு கூருவதாகவும், பதின்ம வயதிலேயே அவரது மகனுக்கு இருக்கும் கவிதையாற்றலை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

ஆதவனின் அந்தக் கவிதை சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதோ அந்தக் கவிதை :