Home One Line P1 இந்திரா காந்தியின் கணவர் மலேசியாவில் இல்லை!

இந்திரா காந்தியின் கணவர் மலேசியாவில் இல்லை!

870
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 11 ஆண்டுகளுக்கு முன்பு பாலர் பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தியின் மகள் பிரசன்னாவை கடத்திச் சென்ற முன்னாள் கணவர் இருக்கும் இடம் இன்னும் கண்டறியப்படவில்லை.

முகமட் ரிட்சுவான் அப்துல்லா அண்டை நாட்டில் அதிகாரிகள் கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காக ஓரிடம் விட்டு ஓரிடத்திற்கு நகர்கிறார் என்று நம்பப்படுவதாக உள்துறை அமைச்சகம் மக்களவையில் இன்று தெரிவித்தது.

“காவல் துறை விசாரணைகளின் அடிப்படையில், முகமட் ரிட்சுவான் மலேசியாவில் இல்லை. வெளிநாட்டில் ஒரு நிரந்தர பகுதியில் இல்லாமல், அதிகாரிகள் விசாரணைகளை நடத்துவதை கடினமாக்குவதற்கு ஓர் இடத்திலிருந்து, வேறொரு இடத்திற்கு நகர்கின்றார்

#TamilSchoolmychoice

“அவரது இருப்பிடத்தை அடையாளம் காண காவல் துறை அண்டை நாட்டில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது” என்று உள்துறை அமைச்சகம் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்துள்ளது.

2011-இல் மார்ச் 11 அன்று ஈப்போ உயர்நீதிமன்றம் தனது மூன்று குழந்தைகளை அவரது மனைவி இந்திராவிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்ட பிறகு, முகமட் ரிட்சுவான் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டதாக அமைச்சகம் குறிப்பிட்டது.

முகமட் ரிட்சுவானை தேடப்படும் நபராக அறிவித்ததை அடுத்து, அவர் இருக்கும் இடத்தைக் கண்டறியும் முயற்சியில் அவர் குடிநுழைவுத் துறையால் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டது.

கே. பத்மநாதன் மார்ச் 2009- இல் இஸ்லாமிய மதத்தினை தழுவி, மேலும் தனது மூன்று குழந்தைகளையும் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றியுள்ளார். இது இந்திராவின் அனுமதியின்றி நடந்துள்ளது.

2009 – ஆம் ஆண்டில் 11 மாதமான அவர்களின் மகள் பிரசன்னா தீட்சாவுடன் முகமட் ரிட்சுவான் தப்பி ஓடிவிட்டார்.

முகமட் ரிட்சுவானைக் கைது செய்து பிரசன்னாவை மீட்டெடுக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஈப்போ உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்குமாறு 2016-ஆம் ஆண்டில், அப்போதைய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலித் அபுபக்கருக்கு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஆண்டு ஜனவரியில், தற்போதய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர், புக்கிட் அமான் மகளுடன் இந்திராவை மீண்டும் ஒன்றிணைப்பதில் ஒரு “மகிழ்ச்சியான முடிவை” நோக்கி விடாமுயற்சியுடன் செயல்படுவதாகக் கூறியிருந்தார்.