Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் 11 – மரணம் ஏதுமில்லை

கொவிட்19: புதிய சம்பவங்கள் 11 – மரணம் ஏதுமில்லை

1000
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மலேசிய சுகாதார அமைச்சின் சார்பில் அதன் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.

நேற்று 14 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் இன்று புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 11-ஆக சற்றே குறைந்திருக்கிறது.

அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பான மரணம் ஏதும் நிகழவில்லை.

#TamilSchoolmychoice

எனவே, இதுவரையில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை 128 ஆக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 11 சம்பவங்களில் 4 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். எஞ்சிய 7 பேர் வெளிநாட்டிலிருந்து தொற்று கண்டவர்களாவர்.

செமினி குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமில் மீண்டும் இரண்டாவது முறையாக கொவிட்-19 தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட 4 சம்பவங்களில் “செமினி ஐடிடி 2” என்ற தொற்றுத் திரள் குழுவில் இரண்டு தொற்றுகள் அடையாளம் காணப்பட்டன.

இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,385 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,092 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டில் மொத்தம் 165 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 3 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து தொற்று கண்ட 7 பேரில் இருவர் மலேசியர்கள். எஞ்சிய 5 பேர் வெளிநாட்டவர்கள். இவர்களில் ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். 4 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

வெளிநாட்டுத் தொற்று கண்ட இரண்டு மலேசியர்களில் ஒருவர் இந்தியாவிலிருந்தும் இன்னொருவர் சவுதி அரேபியாவிலிருந்தும் தொற்று பீடிக்கப்பட்டவர்களாவர்.