Home One Line P1 ரோஸ்மா மன்சோர்: விசாரணையை ஊடகங்களில் தெரிவிப்பதை தடுக்கும் முயற்சியில் தோல்வி

ரோஸ்மா மன்சோர்: விசாரணையை ஊடகங்களில் தெரிவிப்பதை தடுக்கும் முயற்சியில் தோல்வி

486
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சூரிய சக்தி திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஊடகங்களை அனுமதிக்கக்கூடாது என்ற விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்தார்.

சரவாக் கிராமப்புற பள்ளிகளுக்கான சூரிய சக்தித் திட்டம் தொடர்பாக ரோஸ்மா மன்சோருக்கு எதிரான ஊழல் விசாரணையில் வாசிக்கப்பட்ட, முன்னாள் அதிகாரி டத்தோ ரிசால் மன்சோரின் சாட்சி அறிக்கையில் சில பகுதிகளை ஊடகங்களுக்குத் தெரிவிக்க தடை விதிக்கக் கோரி ரோஸ்மா மன்சோர் தரப்பு விண்ணப்பித்திருந்தது.

நீதிபதி முகமட் சைய்னி மஸ்லான் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தபோது, ​​வழக்கு விசாரணையின் 21-வது சாட்சியான ரிசால், 46, அளித்த சாட்சி அறிக்கையை ஊடகங்கள் தெரிவிப்பதை தடை செய்வது பொருத்தமானதல்ல என்று அவர் கருதினார்.

#TamilSchoolmychoice

ரிசாலின் சாட்சி அறிக்கையின் சில பகுதிகளை ரோஸ்மாவின் தற்காப்புக் குழு முன்னர் ஆட்சேபித்தது.

வழக்கறிஞர் டத்தோ ஜக்ஜித் சிங், ரிசாலின் சாட்சி அறிக்கையின் சர்ச்சைக்குரிய பகுதிகளை பதிவு செய்ய ஊடகங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சாட்சி அறிக்கையின் சர்ச்சைக்குரிய பகுதிகள் ஏற்கத்தக்கதா இல்லையா என்பதை நீதிமன்றம் முதலில் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

வழக்கறிஞர் டத்தோ அக்பெர்டின் அப்துல் காதர், நீதிக்காக, சாட்சி அறிக்கையில் சர்ச்சைக்குரிய பகுதியை வழக்கின் இறுதி வரை ஊடகங்களுக்கு தெரிவிக்கக்கூடாது என்று கூறினார்.

இருப்பினும், நீதிபதி முகமட் சைய்னி, இன்றைய நடவடிக்கைகளில் ரிசாலின் சாட்சியத்தை மறைக்க ஊடகங்களுக்கு தடை செய்ய இயலாது என்று கூறினார்.

“ஊடகங்கள் அறிக்கைகளை வெளியிடுவதை நான் தடை செய்ய விரும்பவில்லை. நீங்கள் (தற்காப்பு) சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய சுதந்திரமாக உள்ளீர்கள்,” என்று நீதிபதி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா, 187.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றதாகவும், ஜெபாக் ஹோல்டிங்ஸின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சைடி அபாங் ஷாம்சுடினிடமிருந்து 6.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றதாகவும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.