Home One Line P1 ஹாமிட் பாடோர்: அனைத்து காவல் துறை அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்படவில்லை

ஹாமிட் பாடோர்: அனைத்து காவல் துறை அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்படவில்லை

487
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுங்கை புலோ மாவட்டத்தில் சூதாட்டம், சிகரெட் கடத்தல் கும்பல் உறுப்பினர்கள், காவல் துறை அதிகாரிகளிடையே ஊழல் எதுவும் இல்லை என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

இருப்பினும், அவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட சிறப்பு அறிக்கையை பரிசீலித்த பின்னர், சில பலவீனங்கள் இருப்பதாக அவர் கூறினார். மேலும், மேம்படுத்தப்பட வேண்டிய விவகாரங்கள் இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

“நான் அந்த அறிக்கையை ஆராய்ந்தேன். சமூக ஊடகங்களில் பரவிய அஸ்ரி ஜாங்குட்டின் காணொளியில் எழுப்பப்பட்ட சில விஷயங்கள் துல்லியமற்றவை என்பதைக் கண்டறிந்தேன்.

#TamilSchoolmychoice

“சுங்கை புலோ மாவட்ட காவல் துறை தலைமையகம் மாவட்டத்தில் சூதாட்ட வழக்குகளை எதிர்த்துப் போராடுவதற்கு எந்தவிதமான வெகுமதியையும் இலஞ்சத்தையும் பெறவில்லை என்பதே இதற்குக் காரணம்” என்று அவர் கூறினார்.

“தலைமையகத்தால் மேற்கொள்ளப்படும் சூதாட்ட நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான அமலாக்க முயற்சிகளைப் பொறுத்தவரை, அது தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

“மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்குச் சொந்தமான செல்வத்தின் பின்னணியில் இருந்து நான் பார்க்கிறேன். அவர்கள் இலஞ்சம் ஏற்றுக்கொள்வதைக் காட்டும் அசாதாரணமான சொத்துகள் எதுவுமில்லை” என்று அவர் கூறினார்.

அனைத்து சுங்கை புலோ காவல் துறை தலைமையக ஊழியர்களும், ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினால் அது உண்மையல்ல என்று அவர் கூறினார்.

“அவர்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்ட பின்னர் அவர்களின் உணர்வை தற்காக்க விரும்புகிறேன். அவர்கள் நேர்மையாக செயல்படுகிறார்கள், ” என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் மாதம், முகநூல் கணக்கு உரிமையாளர் அஸ்ரி ஜாங்குட் பகிர்ந்து கொண்ட காணொளியில், சுங்கை புலோவில் பல கடைகளில் சூதாட்ட நடவடிக்கைகள் குறித்த பிரச்சனையை எழுப்பியதுடன், கடத்தப்பட்ட சிகரெட்டுகளின் விற்பனை பரவலாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.