Home One Line P1 10 பில்லியன் ரிங்கிட் ‘கிதா பிரிஹாதின்’ உதவித் திட்டத்தை மொகிதின் அறிவித்தார்

10 பில்லியன் ரிங்கிட் ‘கிதா பிரிஹாதின்’ உதவித் திட்டத்தை மொகிதின் அறிவித்தார்

514
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க மக்களுக்கு உதவுவதற்காக ஊதிய மானிய திட்டம் 2.0 உள்ளிட்ட 10 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ‘கிதா பிரிஹாதின் திட்டம்’ கீழ் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று கூடுதல் உதவிகளை அறிவித்தார்.

ஜூன் மாதத்தில் 35 பில்லியன் ரிங்கிட் பெஞ்சானா உதவித் தொகை மற்றும் மார்ச் மாதத்தில் 260 பில்லியன் ரிங்கிட் பிரிஹாதின் உதவித் திட்டம் உள்ளிட்ட உதவிகளை புத்ராஜெயா அறிவித்திருந்தது.

முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம், தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், மொகிதின் யாசின் ஆட்சி கழிந்தது என்றும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

அதற்கு பதிலாக, பிரதமரின் உரை அதனை ஒட்டிதான் இருக்கும் என்று பலர் எண்ணிய நிலையில், அவர் கொவிட்19-க்கான உதவித் திட்டங்களை அறிவித்தார்.