Home One Line P1 ‘அம்னோவிடம் விளக்கம் கேட்கத் தேவையில்லை’- பெர்சாத்து

‘அம்னோவிடம் விளக்கம் கேட்கத் தேவையில்லை’- பெர்சாத்து

451
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவாக இயங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தை அம்னோ தலைவர் அமகட் சாஹிட் ஹமிடியிடம் தனது கட்சி விளக்கம் கேட்கப்போவதில்லை என்று பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

“இல்லை (நாங்கள் சாஹிட்டின் விளக்கத்தைக் கேட்க மாட்டோம்). எங்களுக்கு வேறு பல கூட்டணிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மறுக்கிறார்கள் (அன்வாருக்கான ஆதரவை மாற்றுகிறார்கள்). இது அன்வாரின் ஏமாற்று வேலை என்று காட்டுகிறது.

“எங்களுக்கு என்ன விளக்கம் தேவை? எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் எங்கள் தலைவருடன் இருக்க விரும்புகிறோம். அதே நேரத்தில் தேசிய கூட்டணி கட்சிகள் வலுவாக இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக பிரதமர் மொகிதின் யாசினுக்கு அளித்த ஆதரவை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திரும்பப் பெறுவது குறித்து அம்னோ விளக்கமளிக்க வேண்டும் என்று பாஸ் கேட்டுக் கொண்டது.

இது உண்மையாக இருந்தால், முவாபாக்காட் நேஷனல் சாசனத்தின் கீழ் கட்சிகளின் ஒப்பந்தத்தை அம்னோ மீறுவதாக அதன் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

புதன்கிழமை, அன்வார் இப்ராகிம் வெளியிட்ட கூற்றினை ஆதரித்துப் பேசிய அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடியின் கருத்துக்கு விளக்கம் கோர பாஸ் விரும்புவதாகத்  தெரிவித்தார்.

புதன்கிழமை, புதிய அரசாங்கத்தை உருவாக்க அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிக்க முடிவு செய்வதிலிருந்து, அம்னோ மற்றும் தேசிய முன்னணி அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தடுக்க முடியாது என்று சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.

“நன்கு அறியப்பட்டபடி, அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஆகியவை தேசிய கூட்டணியின் அங்கக் கட்சிகள் அல்ல. தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே.

“அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வார் இப்ராகிமை ஆதரிக்க முடிவு செய்ததாகவும், மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுவதை, அம்னோ, தேசிய முன்னணிக்குத் தடுக்க உரிமையில்லை”

“பல அம்னோ, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன், ”என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.