Home One Line P1 எஸ்பிபி மறைவுக்கு மோடி, ராம்நாத் கோவிந்த் இரங்கல்

எஸ்பிபி மறைவுக்கு மோடி, ராம்நாத் கோவிந்த் இரங்கல்

576
0
SHARE
Ad

புது டில்லி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட, இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த், பல அரசியல்வாதிகள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாக கொவிட்19 தொற்றுடன் போராடி வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25 அன்று சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனையில் காலமானார்.

“ஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் துரதிர்ஷ்டவசமான மறைவுடன், நமது கலாச்சார உலகம் ஏழ்மையானது. இந்தியா முழுவதும் உள்ள வீடுகளில், அவரது இனிமையான குரல், இசை பல தசாப்தங்களாக இரசிகர்களை கவர்ந்தது. துக்கமான இந்நேரத்தில் , என் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், அபிமானிகளுடனும் உள்ளன. ஓம் சாந்தி, ” என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

“எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானதை அடுத்து, இந்திய இசை அதன் குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரது எண்ணற்ற இரசிகர்களால் ‘பாடும் நிலா’ அல்லது என்று அழைக்கப்பட்ட இவருக்கு பத்ம பூஷண் மற்றும் பல தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல் ”என்று இந்திய அதிபர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியத் துணை அதிபரான வெங்கையா நாயுடு, பாடகரின் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். “புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஸ்ரீ எஸ்.பி.பாலசுபிரமணியம் அவர்களின் துயர மறைவுக்கு அதிர்ச்சி. இசை உலகில் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார், ”என்று அவர் டுவிட்டரில் பரிவிட்டுள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ஆம் ஆத்மி கட்சியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

“ஸ்ரீ எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்ததைப் பற்றி வருத்தமாக இருக்கிறது. இந்தியா தனது புகழ்பெற்ற குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், ” என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.