நீண்ட காலமாக அந்தக் கூட்டுறவுக் கழகத்தை துன் சாமிவேலு தலைமையேற்று நடத்தி வந்தார். அவருக்குப் பின்னர் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தற்போது தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
“விஸ்மா துன் சாமிவேலு” கட்டடத்தின் திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்தேறியது.
டத்தோஸ்ரீ சரவணனும் அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவு கழகத்தின் செயலவை உறுப்பினர்கள், வாரிய உறுப்பினர்கள், ம.இ.கா வின் மூத்த தலைவர்கள், கழகப் பேராளர்கள், ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் அந்தத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.