Home One Line P1 கொவிட்19: புதிதாக 489 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: புதிதாக 489 சம்பவங்கள் பதிவு

513
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் 489 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய நோய்த்தொற்று எண்ணிக்கையைத் தொடர்ந்து நாட்டில் ஏழாவது நாளாக மூன்று இலக்கு எண் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

74 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,501- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

489 புதிய சம்பவங்களின்படி, நாட்டில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 13,993- ஆக உள்ளது என்று அவர் கூறினார்.

மொத்தம் 3,351 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 40 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 13 பேருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.

இன்று புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இறப்பு எண்ணிக்கை 141- ஆக உள்ளது.

நேற்று முன்னெப்போதும் போல் இல்லாமல் 691 சம்பவங்கள் பதிவானது. இது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியதோடு இல்லாமல், நேற்றை இறப்பு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை ஒன்றும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னமும், சபா மற்று கெடா அதிகமான தொற்று சம்பவங்களைக் கொண்டுள்ளன. தொடர்ந்து நாட்டில் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சபாவில் மூன்று மாவட்டங்களும், சிலாங்கூரில் ஒரு மாவட்டமும் இன்று நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சபாவில், சண்டாகான், பாபார் மற்றும் துவாரன் ஆகிய இடங்கள் கட்டுப்பாட்டுக் கீழ் வைக்கப்படும். சிலாங்கூரில் கிள்ளான் மாவட்டம் இந்த கட்டுப்பாட்டுக்குள்  அக்டோபர் 9 நள்ளிரவு 12 மணி முதல் வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.