Home One Line P1 ‘கெடா மாநில பாஸ் அரசு பேசுவது ஒன்று செய்வதொன்று’- எஸ்.ஆனந்தன்

‘கெடா மாநில பாஸ் அரசு பேசுவது ஒன்று செய்வதொன்று’- எஸ்.ஆனந்தன்

759
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: தேசிய கூட்டணி கட்சிகளின் நட்புறவைப் பேணாது, கெடா மாநில பாஸ் கட்சி நட்புறவின் மனப்பான்மையை அவமதிப்பதாக கெடா மாநில மஇகா கூறியது.

கெடா மாநில பாஸ் கட்சி சபா மாநில அரசாங்கத்தின் முன்மாதிரியை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது, பிற கட்சிகளை மதிக்கும் தன்மையைக் கொண்டது என்று அதன் தலைவர் அதன் தலைவர் எஸ்.ஆனந்தன், கூறினார்.

“சபா மாநில சட்டமன்ற தலைமையில் இணைய பாஸ் தலைமைக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் சபா மாநில அரசு காட்டிய திறந்த அணுகுமுறையை நான் மதிக்கிறேன். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பாஸ் தலைவர்கள் இந்த நியமனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

“இருப்பினும், பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடு, சபா அரசாங்கத்தின் அணுகுமுறையிலிருந்து மிகவும் வேறுபட்டது. இது மற்ற கட்சிகளுக்கு அதன் தலைமையில் இணைய நேரடி வாய்ப்புகளை வழங்க மறுக்கிறது” என்று அவர் கூறினார்.

மாநில அரசாங்க நியமனங்களில் தேசிய முன்னணி பிரதிநிதிகளை ஓரங்கட்டுவதன் மூலம் மாநில அரசு சார்புடையதாக விமர்சிக்கப்படுகிறது.

பாஸ் கட்சி பேசுவது ஒன்று செய்வது ஒன்று என்று அவர் விமர்சித்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராமத் தலைமைக் குழு (ஜே.கே.கே.கே), அரசாங்க நிறுவன நியமனங்கள், இந்தியத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தின் சிறப்பு ஆலோசகர்கள் போன்ற நியமனங்களில் பாஸ் கட்சி, மஇகா மற்றும் தேசிய முன்னணியை ஒதுக்கி உள்ளது.

” கெடா அரசாங்கம் இந்த விஷயத்தில் சபா அரசாங்கத்தைப் போலவே திறந்த மனதுடன், தொலைநோக்குடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தேர்தல்களில் அரசாங்க இயந்திரங்களை வலுப்படுத்துவதில் மஇகாவும் தனது பங்கை வகிக்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.