அதற்கடுத்து இன்றைய புதிய சம்பவங்களின் எண்ணிக்கைதான் இரண்டாவது மிக அதிகமான ஒருநாள் எண்ணிக்கையாகும்.
கொவிட் 19 தொற்றுகளின் நேற்றைய எண்ணிக்கை 374 இருந்தது. ஒரே நாளில் சுமார் 200 தொற்றுகள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
133 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 10,913- ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் பக்கத்தின் வழி நேரலையாக ஒளிபரப்பான இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
561 புதிய சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 15,657 ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இன்று புதிதாக 2 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
சபாவில் அதிகமாக 488 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கெடாவில் 16 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 26 சம்பவங்களும், கோலாலம்பூரில் 15 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.
இதற்கிடையில் கொவிட்-19 தொற்று அபாயம் காரணமாக 1 உத்தாமா பேரங்காடியும், டுரோபிகானா கோல்ப் கிளப் வளாகமும் மூடப்பட்டிருக்கிறது.