Home One Line P1 கொவிட்19: புதிதாக 589 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்

கொவிட்19: புதிதாக 589 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்

397
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை 589 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், மொத்தமாக நாட்டில் 18,129 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

409 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 12,014- ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் பக்கத்தின் வழி நேரலையாக ஒளிபரப்பான இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மொத்தம் 5,945 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 103 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 31 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

#TamilSchoolmychoice

இன்று புதிதாக 3 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரணங்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.

சபாவில் அதிகமாக 340 சம்பவங்களும், சிலாங்கூரில் 140 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.