Home One Line P1 அம்னோ முடிவை பிகேஆர் மதிக்கிறது!

அம்னோ முடிவை பிகேஆர் மதிக்கிறது!

629
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு அம்னோவின் ஆதரவை வலுப்படுத்த அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று வெளியிட்ட அறிக்கையை கட்சி மதிக்கிறது என்று பிகேஆர் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 14-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை தனது கட்சி தொடரும் என்று பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.

“பிகேஆர் அம்னோ தலைவர் அறிக்கையை கவனித்து மதிக்கிறது

#TamilSchoolmychoice

“அதே நேரத்தில், மக்களின் ஆணையை மீட்டெடுக்கும் நம்பிக்கைகளை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று அவர் கூறினார்.

கொவிட் -19- ஐத் தொடர்ந்து சாஹிட் “அரசியல் சண்டையை” நிறுத்துவதாக அறிவித்து மக்களுக்கு உதவ கவனம் செலுத்துவதாக அறிக்கை வெளியிட்ட பின்னர், அது இந்த அறிக்கையை வெளியிட்டது.

“கொவிட் -19 அச்சுறுத்தலையும், நாட்டின் பொருளாதார நிச்சயமற்ற தன்மையையும் நாடு எதிர்கொள்ளும் நேரத்தில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை பலப்படுத்தப்பட வேண்டும்” என்று சாஹிட் நேற்று கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய கொவிட் -19- ஐ எதிர்த்து போராடவும், பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்கும் இது செய்யப்பட்டதாகக அவர் கூறினார்.

இப்போதைக்கு கொவிட்-19 தொடர்பான விவகாரத்தில் கவனம் செலுத்த இருப்பதாக அம்னோ முடிவு செய்துள்ளதாகவும் சாஹிட் கூறியிருந்தார்.