Home One Line P1 மாமன்னர் கட்டளைக்கு அரசியல்வாதிகள் உண்மையாகவே இணங்குகிறார்களா?

மாமன்னர் கட்டளைக்கு அரசியல்வாதிகள் உண்மையாகவே இணங்குகிறார்களா?

464
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசியலை கருத்துகளை நிறுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அளித்த அறிவுரைக்கு அவர்கள் இணங்குகிறார்களா இல்லையா என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற அவரது ஆலோசனையை மதிக்கிறார்களா என்றும் ஹாடி கேள்வி எழுப்பியுள்ளார்.

“அரசியல் பிரதிபலிப்பு நிறுத்தப்பட்டு, பொறுப்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாத அளவிற்கு நேர்மையாக இருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

“தீவிர கண்காணிப்பும் செய்யப்பட வேண்டும் – எச்சரிக்கை கொடுக்கப்பட்ட பிறகு இது மதிக்கப்படுகிறதா?” என்று இன்று ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மக்களே சொந்தமாக அதனை முடிவு செய்ய விட்டுவிட்டதாக ஹாடி கூறினார்.

தேசிய கூட்டணி அரசாங்கம் கோரிய அவசரநிலை அறிவிப்பின் அவசியத்தை நிராகரிக்கும் போது சுல்தான் அப்துல்லா இந்த எச்சரிக்கையை வழங்கினார்.

இதனிடையே, நவம்பர் 6- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2021 வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு, மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்று கேட்டுக் கொண்டார்.

கொவிட் -19- ஐ கையாள்வதிலும், நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிப்பதிலும் வரவு செலவுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை மாமன்னர் வலியுறுத்தியதாக அரண்மனை காப்பாளர் டத்தோ அகமட் பாடில் ஷம்சுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“அல்-சுல்தான் அப்துல்லா, எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும், குறிப்பாக முன்னணி ஊழியர்களுக்கும், இந்த தொற்றுநோய் தொடர்ந்து பரவாமல் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் கொள்கைகளையும், முயற்சிகளையும் தொடரவும் தொடங்கவும் முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.

“இது தொடர்பாக, அல்-சுல்தான் அப்துல்லா அனைத்து அரசியல் மோதல்களையும் நிறுத்துவதற்கும், மக்களின் நலன் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் மாமன்னரின் ஆலோசனையை மதிக்குமாறு மக்களவை உறுப்பினர்களை அழைத்துள்ளார். இதனால் 2021 வரவுசெலவுத் திட்டம் எந்தவொரு குறுக்கீடு இல்லாமல் ஒப்புதல் அளிக்கப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2021 வரவுசெலவுத் திட்டம் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் கொவிட் -19 பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கையை நடத்த கவனம் செலுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.