Home One Line P1 20 தேமு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மொகிதினுக்கு ஆதரவு

20 தேமு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மொகிதினுக்கு ஆதரவு

428
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக தேசிய முன்னணி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் துணை நிற்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு கூட்டு அறிக்கையில், 20 அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆயினும், நிலைமை சரியானதும் பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

“ஒருமித்த கருத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். மக்களுக்கு பொருளாதார மீட்சி மற்றும் சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் பிரதமர் மொகிதின் யாசின் தலைமைக்கு முழு ஆதரவையும் வழங்குவோம். அரசாங்கத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, பொது சுகாதார நிலை மேம்பட்டதும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அதுவரையில் அரசாங்கத்தில் தாங்கள் தேசிய முன்னணியின் இருப்பை மேலும் பலப்படுத்த பணியாற்ற இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற இருக்கும் வரவு செலவு திட்ட வாக்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்க, தேசிய முன்னணி அதன் இரண்டு பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு மொகிதின் யாசின் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.

இது குறித்து பேசிய அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், இதனை ஆய்வு செய்ய நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருலுக்கு வருகிற வியாழக்கிழமை வரையிலும் கால அவகாசம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

“வரவு செலவு திட்டம் குறித்தும் பேசினோம். இன்னமும் நாம் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கிறோம், ஆனால், எங்களது இரண்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுகிறோம். இதனை ஆய்வு செய்ய வியாழக்கிழமை வரை அவர்களுக்கு நேரம் உள்ளது. இந்த இரண்டு பரிந்துரைகளும் வரவு செலவு திட்ட இறுதி அறிக்கையில் இணைக்கப்படும் என்று நினைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த இரண்டு பரிந்துரைகள் என்னவென்று அகமட் மஸ்லான் விரிவாகக் கூறவில்லை.

ஆனால், அவர் நஜிப் ரசாக் முன்வைக்கும் ஈபிஎப் கணக்கு 1-லிருந்து 10,000 ரிங்கிட் திரும்பப் பெறுவதையும், கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து பேசுவதாகக் கருதப்படுகிறது.