Home One Line P1 மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி, 8-வது நாளாக தொடரும் போராட்டம்

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி, 8-வது நாளாக தொடரும் போராட்டம்

418
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் எட்டாவது நாளை எட்டி உள்ளது. பெரும்பாலான முக்கியச் சாலைகள் இதனால் மூடப்பட்டுள்ளதாகவும், டில்லி ஸ்தம்பித்து போய் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

நேற்றைய தினம் மத்திய அமைச்சர்களுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.