Home One Line P1 பேராக்: 5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்

பேராக்: 5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்

412
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் மாநில ஆட்சிக்குழுவின் ஐந்து உறுப்பினர்கள் இன்று பிற்பகல் இங்குள்ள இஸ்தானா இஸ்காண்டாரியாவில் சுல்தான் நஸ்ரின் ஷா முன்னிலையில் பதவியேற்றனர்.

அவர்கள் அம்னோவைச் சேர்ந்த நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். ஒருவர் சுல்தான் நஸ்ரின் ஒப்புதல் அளித்த பெர்சாத்து கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

அம்னோவின் லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ முகமட் சுல்கிப்ளி ஹாருன், டத்தோ ஷாருல் ஜமான் யஹ்யா (ருங்குப்), டத்தோ டாக்டர் வான் நோராஷிகின் வான் நூர்டின் (கம்போங் காஜா) மற்றும் கைருல் ஷாரில் முகமட் (போதா).

#TamilSchoolmychoice

டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமுவின் நிர்வாகத்தின் போது அவர்கள் நான்கு பேரும் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தனர்.

இதற்கிடையில், பெர்சாத்துவைச் சேர்ந்த சுங்கை மானிக் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ சைனோல் பட்ஸி பஹாருடினும் பதவி ஏற்றார்.