Home One Line P1 கொவிட்-19: 2,234 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் மட்டும் 1,428

கொவிட்-19: 2,234 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் மட்டும் 1,428

445
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,234 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 2,229 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 5 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 78,499 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,112 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 66,236-ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 11,867 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 124 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 60 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநிலம் வாரியாக சிலாங்கூரில் அதிகமாக 1,428 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் 274 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 136 சம்பவங்களும், ஜோகூரில் 100 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.

இன்று மூவர் மரணமுற்ற நிலையில் மரண எண்ணிக்கை 396-ஆக உயர்ந்துள்ளது.