Home One Line P2 தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கிய கமல்- தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைவார்

தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கிய கமல்- தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைவார்

563
0
SHARE
Ad

சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். அவ்வப்போது அவர் ஊர் ஊராக செல்லும் புகைப்படங்களும், காணொலிகளும் மக்கள் நீதி மய்யம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக தென் மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, ரஜினிகாந்தின் அரசியல் கொள்கை என்ன என்பதை அறிந்துகொண்டு, மக்களுக்காக அவருடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். கூடிய விரைவில் 3- ஆம் அணி அறிவிப்பு வெளியாகும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தேவைப்பட்டால், இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் ,கமலுடன் இணைவேன் என்று ரஜினிகாந்தும் முன்னதாக நவம்பரில் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

இதனால், ரஜினி-கமல் கூட்டணி அரசியல் அரங்கில் உதிக்குமா என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையில் மூன்றாவது அணி கட்டாயம் அமையும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.