Home One Line P1 டிச. 24, 25 கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்குச் செல்ல அனுமதி

டிச. 24, 25 கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்குச் செல்ல அனுமதி

425
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வீட்டு வருகைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால், அவை உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு அல்லது மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் இருக்கும் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுடன் இணைந்து டிசம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் அந்தந்த தேவாலயங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உள்ள பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, இதுபோன்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என்று சப்ரி யாகோப் கூறினார்.