Home One Line P1 கொவிட்19: புதிதாக 1,153 சம்பவங்கள் பதிவு – ஒரே ஒரு மரணம்

கொவிட்19: புதிதாக 1,153 சம்பவங்கள் பதிவு – ஒரே ஒரு மரணம்

600
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று சனிக்கிழமை வரையில், 24 மணி நேரத்தில் 1,153 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இதற்கு முந்தைய எண்ணிக்கையை விட நேற்றைய எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன.

உள்ளூரில் 1,151 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 2 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 91,969 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

நேற்றுடன் 998 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 76,242-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 15,294 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 112 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 56 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நேற்று சனிக்கிழமை வரையிலான ஒரு நாளில் ஒரே ஒரு மரணம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 433-ஆக உள்ளது.

மாநிலம் வாரியாக தொற்றுகளின் எண்ணிக்கையில் சிலாங்கூர் இன்னும் முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் 401 தொற்றுகளை சிலாங்கூர் கொண்டிருக்க, அடுத்த நிலையில் கோலாலம்பூர் 281 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது. சபா 199 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது.