Home One Line P1 விக்னேஸ்வரன் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்

விக்னேஸ்வரன் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்

620
0
SHARE
Ad

கிள்ளான் : கொவிட் -19 தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நன்கு குணமடைந்து மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்.

கொவிட்-19 தொற்று காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்னேஸ்வரன் கடந்த செவ்வாய்க்கிழமை டிசம்பர் 29-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்.

அதன் பின்னர் தனது முதல் நிகழ்ச்சியாக கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 31-ஆம் தேதி, போர்ட் கிள்ளான் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் தனது ஆதரவாளர்களுடன் அவர் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

அந்த நிகழ்ச்சியில் மனித வள அமைச்சரும், மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனும் கலந்து கொண்டார்.

அந்த சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: