Home One Line P1 அவசர காலப் பிரகடனத்தை எதிர்த்து அன்வார் வழக்கு தொடுக்கிறார்

அவசர காலப் பிரகடனத்தை எதிர்த்து அன்வார் வழக்கு தொடுக்கிறார்

440
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் அவசரகாலப் பிரகடனத்தை எதிர்த்து அன்வார் இப்ராகிம் வழக்கு தொடுக்கவிருக்கிறார்.

இந்தப் பிரகடனம் அதிகார விதிமீறலாகும் என்ற அடிப்படையில் அன்வார் இந்த வழக்கைத் தொடுக்கிறார்.

இதற்கு முன்னர் அவசரகாலப் பிரகடனத்தை இரத்து செய்ய வேண்டுமென மாமன்னரை வலியுறுத்துங்கள் என்று அன்வார் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

#TamilSchoolmychoice

மாமன்னர் அவசர காலப் பிரகடனத்தை இரத்து செய்து உத்தரவிடுவார் எனவும் விரைவிலேயே நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி அவசர காலம் தேவையா என்பதை விவாதிக்க வழிவிடுவார் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையும், மக்களின் உரிமைகளையும் தற்காக்கும் விதமாக அவசர காலத்தை இரத்து செய்ய மாமன்னருக்கு மேல்முறையீடு செய்யும் அதே வேளையில், தனது சட்ட ஆலோசனைக் குழுவினர் வழக்கு தொடுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்து வருவதாகவும் அன்வார் தெரிவித்தார்.