Home One Line P1 மாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது

மாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது

765
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று அதிகாலை பினாங்கில் நடந்த தைப்பூச இரத ஊர்வலத்திற்கு மாநில அரசு அல்லது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார்.

மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணனின் தலையீடு காரணமாக ஊர்வலத்தை மேற்கொள்ள செட்டியார் கோயில் துணிச்சலாக செயல்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கொவிட் -19 தொற்று நோய் காரணமாக பினாங்கு தைப்பூசக் கொண்டாட்டங்களை நிறுத்தியது. அதற்கு பதிலாக பக்தர்கள் வீட்டில் பிரார்த்தனை செய்யுமாறு வலியுறுத்தியது.

#TamilSchoolmychoice

இருப்பினும், பத்து மலை கோயிலுக்கு இதேபோன்ற இரத ஊர்வலம் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டுகோட்டை செட்டியார் கோயில் இரத ஊர்வலம் நடத்த முறையீடு செய்ததாக இராமசாமி கூறினார்.

சரவணனின் தலையீட்டை அவர்கள் கோரி, கோவிலின் முறையீடு குறித்து மாநில அரசிடம் கூட விவாதிக்கவில்லை என்று இராமசாமி கூறினார்.

“சரவணனின் தலையீட்டால் துணிச்சலாக செட்டியார் கோயில் நடைமுறைகளின் கீழ் வெள்ளி இரதத்தை வெளியேற்றியது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இன்றுவரை, பினாங்கில் இரத ஊர்வலத்திற்கு மாநில அரசும், தேசிய பாதுகாப்பு மன்றமும் அனுமதி வழங்கவில்லை. செட்டியார் கோயில் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது ,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

மாநில விஷயங்களில் தலையிட்டதாகக் கூறி சரவணனை இராமசாமி கண்டித்தார். மனிதவள அமைச்சரை தொடர்பு கொண்டபோது, ​​பினாங்கு துணை முதல்வரை அழைத்து இந்த விஷயத்தை விளக்குவதாகக் கூறியுள்ளார்.