Home One Line P1 அமைச்சின் பொறுப்புகளை ஏற்காவிட்டால், சுகாதார அமைச்சர், துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

அமைச்சின் பொறுப்புகளை ஏற்காவிட்டால், சுகாதார அமைச்சர், துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

377
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட், தற்போதைய அமைச்சர் டாக்டர் அடாம் பாபாவையும் இரு துணை அமைச்சர்களையும் சுகாதார அமைச்சின் முடிவுகளில் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

இல்லையேல், அவர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தாம் அமைச்சின் நிபுணர்களின் கூட்டுக் கருத்துக்களைக் வெளிப்படுத்தும் ஒரு தூதுவர் என்று கூறியதை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நூர் ஹிஷாம் தான் ஒரு ‘தூதர்’ என்று வலியுறுத்தியதால் பலர் குழப்பமடைந்துள்ளதாகவும் அமைச்சின் முடிவின் பின்னால் அறிவியல் விளக்கம் இல்லை என்று சுல்கிப்ளி கூறினார்.

“கொவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலையின் போது அவசரநிலையை அறிவிக்காமல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையே போதுமானது என்பதை இது வெளிப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

மலேசியா தனது அரசியல் தலைமையை இழந்துவிட்டதாகவும், கடந்த ஆண்டு நம்பிக்கை கூட்டணி நிர்வாகம் அகற்றப்பட்டதிலிருந்து நாடு கிட்டத்தட்ட தானாகவே இயங்குவதாகவும் அவர் கூறினார்.

டாக்டர் அடாம், டாக்டர் நூர் அஸ்மி கசாலி மற்றும் ஆரோன் ஆகோ தகாங் ஆகியோர், சுகாதார அமைச்சின் அதிகாரத்துவத்தினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஒரு குழுவாக பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொது மற்றும் தனியார் துறைகளில் சுகாதார அமைச்சுக்கு வெளியே உள்ள நிபுணர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் சுல்கிப்ளி சுகாதார அமைச்சகத்தை வலியுறுத்தினார்.