Home One Line P1 பிப்ரவரி 18 : ரோஸ்மா விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா?

பிப்ரவரி 18 : ரோஸ்மா விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா?

402
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா என்பது பிப்ரவரி 18 அன்று அறியப்படும். 187.5 மில்லியன் மில்லியன் இலஞ்சம் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி முகமட் சைய்னி மஸ்லான் இன்று அரசு தரப்பு மற்றும் தற்காப்பு குழுவினரிடமிருந்து வாதங்களைக் கேட்டதை அடுத்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இந்த தேதியை நிர்ணயித்தது.

ரோஸ்மாவை ஜக்ஜித் சிங் மற்றும் அக்பெர்டின் தலைமையிலான வழக்கறிஞர்கள் பிரதிநிதிக்கின்றனர். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் அரசு தரப்பு குழுவுக்கு தலைமை தாங்குகிறார்.

#TamilSchoolmychoice

ஜெபாக் ஹோல்டிங்ஸ் செண்டெரியான் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் சைடி அபாங் சாம்சுதீனிடமிருந்து 187.5 மில்லியனைக் கோரியதாக மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை ரோஸ்மா எதிர்கொள்கிறார். சரவாக் நகரில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூரிய திட்டங்களை அந்நிறுவனம் பெற அவர் இந்த நிதியைக் கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

2016 முதல் 2017 வரை சைடியிடமிருந்து 6.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வாங்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.