இவர்களின் சராசரி வயது 86 என்றும், அதில் பெரும்பாலானோர் ஏற்கனவே பிற நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் பெற்றுக் கொண்ட தடுப்பூசிகளினால் 364 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதில், 199 பேர் பிபைசர்-பயோன்டெக் தடுப்பூசி பெற்றவர்கள். 154 பேர் மாடர்னா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள்.
கொவிட்-19 தொற்றுக்கு, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. பல்வேறு பகுதிகளில் இத்தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.