Home One Line P1 ஈபிஎப்: ஐ-சினார் விண்ணப்பங்களுக்கு இன்று முதல் பணம் செலுத்தப்படும்

ஈபிஎப்: ஐ-சினார் விண்ணப்பங்களுக்கு இன்று முதல் பணம் செலுத்தப்படும்

488
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிப்ரவரி 25- ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) கீழ் ஐ-சினார் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் படிப்படியாக அங்கீகரிக்கப்பட்டு இன்று முதல் பணம் செலுத்தப்படும்.

நிபந்தனைகள் இல்லாமல் மேம்படுத்தப்பட்ட ஐ-சினார் வசதி செயல்படுத்தப்படுவதற்கு முன்னர், ஒப்புதலுக்காக காத்திருக்கும் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் இதில் அடங்கும் என்று ஈபிஎப் கூறியது.

இந்த செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருப்பதால், உறுப்பினர்களின் பொறுமையை ஈபிஎப் பாராட்டுகிறது.

#TamilSchoolmychoice

கணக்கு 1 இருப்புக்கு உட்பட்டு, 55 வயதிற்கு உட்பட்ட மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும், மார்ச் 8 முதல், நிபந்தனைகளை அகற்றப்பட்டதால், புதிய விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்று ஈபிஎப் குறிப்பிட்டது.

“இதில் மலேசியர் அல்லாத ஈபிஎப் பங்குதாரர்களும் உள்ளனர். சமர்ப்பித்த ஐந்து வேலை நாட்களுக்குள் புதிய விண்ணப்பங்கள் செயல்படுத்தப்படும். அதன் பிறகு உறுப்பினர்கள் தங்கள் விண்ணப்ப நிலை மற்றும் கட்டண தேதியை சரிபார்க்கலாம், ” என்று அது கூறியது.