Home One Line P1 சினோவாக் தடுப்பூசி மார்ச் 18 முதல் செலுத்தப்படும்- கைரி முதலில் பெறுவார்

சினோவாக் தடுப்பூசி மார்ச் 18 முதல் செலுத்தப்படும்- கைரி முதலில் பெறுவார்

582
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சினோவாக் கொவிட் -19 தடுப்பூசியை மார்ச் 18- ஆம் தேதி சுகாதார அமைச்சகம் தொடங்கவுள்ளது. இதனை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் முதலில் பெறுகிறார்.

தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராக இருக்கும் கைரி இன்று செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

“ரெம்பாவ் மருத்துவமனையில் இது தொடங்கப்படும். சினோவாக் தடுப்பூசிசை நான் முதலில் பெறுவேன்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

100,000 சினோவாக் தடுப்பூசிகள் இன்று பெறப்படும் என்றும், அடுத்த 100,000 தடுப்பூசிகள் மார்ச் 22- ம் தேதி பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

“மேலும், 83,070 பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் இன்று பெறப்படும். மார்ச் 22 அன்று மேலும் 100,000 தடுப்பூசிகளும், மார்ச் 29 அன்று 125,190 தடுப்பூசிகளும் பெறப்படும். மார்ச் 29- க்குள், பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,000,350 -ஆக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

மார்ச் 13 நிலவரப்படி மொத்தம் 292,104 பேர் பிபைசர்-பயோஎன்டெக்கின் முதல் கட்டத்தில் பெற்றுள்ளதாக கைரி கூறினார். மைசெஜ்தெரா கொவிட் -19 தடுப்பூசி பதிவில், 1.4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இன்னும் தடுப்பூசி பதிவை முடிக்கவில்லை என்று அவர் கூறினார்.